சமச்சீர்க் கல்வியை தமிழக அரசு கைவிடக் கூடாது-ராமதாஸ்

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் ஏழை பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்களும் அறிஞர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், சமச்சீர்க் கல்வி முறையை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த முன்வடிவை தமிழக அரசு சட்டப்பேரவையில் அவசர அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதற்காக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள முன்வடிவில், முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்படாதது உட்பட சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிக்கிறது.
இதன்மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர்க் கல்வி திட்டம் முதன் முறையாகக் கொண்டுவரப்பட்டது, பா.ம.க. சார்பில் பேசிய சட்டப்பரவைக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி சமச்சீர்க் கல்விக்கான சட்ட முன்வடிவில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், முத்துக்குமரன் குழு அறிக்கையில் என்ன பரிந்துரை சொன்னார்களோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியதை சுட்டிக்காட்டி, இது தொடர்பான பா.ம.க.வின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்று வினா எழுப்பியிருக்கிறார்.
சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக பா.ம.க.வின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகத்தான் உள்ளது. தமிழக அரசு சுட்டிக்காட்டியிருப்பதை போல, சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் சில குறைகள் இருப்பதை பா.ம.க. எப்பாதும் மறுக்கவில்லை. ஆனால், அந்த குறைகளைக் காரணம் காட்டி சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நிறுத்திவிடக்கூடாது என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு.
சமச்சீர்க் கல்வித் திட்டம் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே அதிலுள்ள குறைகளை களைய வேண்டும் என்றுதான் நான் வலியுறுத்தினேன்.
சமச்சீர்க் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சமச்சீர்க் கல்வித் திட்டம் மீண்டும் எப்போது செயல்படுத்தபடும் என்று அவையில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை.
இவற்றையெல்லாம் வைத்துபார்க்கும்போது சமச்சீர்க் கல்வித் திட்டத்தை கிடப்பில் போட அரசு திட்டமிட்டிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.
சமச்சீர்க் கல்விமுறை அனைத்து தரப்பினரிடமும் வரப்வேற்பை பெற்றுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். செயல்படுத்திக்கொண்டே அதிலுள்ள குறைகளை களைய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications