உ.பி.மாநில சட்டசபைத் தேர்தல் உத்தி-ராகுல் காந்தி தீவிர ஆலோசனை

காங்கிரஸ் கட்சியில் இப்போது மகாத்மா காந்தியை விட பிரபலமானவர் ராகுல் காந்திதான். அவரது யோசனைகளுக்கு அங்கு அமோக வரவேற்பு. ஆனால் ராகு்ல் காந்தியின் திட்டமெல்லாம் தொடர்ந்து மண்ணைக் கவ்வியபடிதான் உள்ளது. பீகாரில் பெரும் தோல்வியைத் தழுவியது ராகுல் பார்முலா. அதேபோல தமிழகத்தில் நிலைமை நாறிப் போய் காங்கிஸ் கட்சி நாசமாகியுள்ளது.
இந்த நிலையில் அடுத்து உ.பி. மாநில சட்டசபைத் தேர்தலுக்கான உத்திகளில் குதித்துள்ளார் ராகுல் காந்தி. இன்று காலை லக்னோ வந்த அவர் கட்சித் தலைமையகத்திற்குச் சென்று ஆலோசனைகளி்ல் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் ராகுல் காந்திக்கு வேட்பாளர்கள் பெயரை தேர்வு செய்யும் அதிகாரத்தைக் கொடுக்கவுள்ளதாக தெரிகிறது.
தேர்தல் உத்திகள், பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட வை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளதாம். உ.பியில் 2012ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications