ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 10 சாட்சிகளிடம் மறுவிசாரணை நடத்துமாறு சசிகலா சார்பில் கடந்த 3-ம் தேதி தாக்கல் செய்த மனுவை நீதிபதி மல்லிகார்ஜுனையா தள்ளுபடி செய்தார்.
ஆடிட்டர் பாலாஜியிடம் மறுவிசாரணை நடத்தக் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருப்பதால், அந்த உத்தரவு வரும் வரை இந்த வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அரசு உதவி வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,
உச்ச நீதிமன்றமும், கர்நாடக நீதிமன்றமும் இந்த வழக்கு விசாரணை தினமும் நடக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் மேல்முறையீட்டு மனு குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கலாம் என்பதால், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை அன்றைக்கே ஒத்திவைக்கலாம். ஒரு வாரம் ஒத்திவைப்பது அதிகம் என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சசிகலா மனுவை ஏற்று வழக்கு விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications