ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. அவரது ஜாமீன் மனுவை முதலில் சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்தது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் கனிமொழி.
அந்த மனு மீதான தீர்ப்பை பெரும் இழுபறிக்குப் பின்னர் நேற்று அறிவித்த உயர்நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது. கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் ஜாமீன் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
இதனால் கருணாநிதி தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கனிமொழி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல சரத்குமார் ரெட்டியும் அப்பீல் செய்யவுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications