இலவச பட்டா கேட்டு கிராமத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்
களக்காடு: இலவச பட்டா வழங்கக் கோரி காட்டுப் பகுதியில் குடியேறிய மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
களக்காடு அருகேயுள்ள சிதம்பராபுரம் முத்துநகரைச் சேர்ந்தவர்கள் இலவச வீட்டு மனை கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன் களக்காடு மலையடிவாரத்தில் உள்ள காட்டுப் பகுதியான கூட்டுவடலி என்ற இடத்தில் தங்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா தருமாறு வருவாய் துறையினருக்கு மனு அளித்தனர்.
ஆனால் அந்த இடம் சென்னை ஆயுர்வேத அறிவியல் முன்னேற்ற மையம் மற்றும் அறக்கட்டளையினருக்கு சொந்தமானது என்பதால் அதற்கு பட்டா கொடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று பகல் முத்துநகர் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் குடுமத்தினருடன் அந்த பகுதிக்கு சென்று குடிசைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கண்ட ஆயுர்வேத அறக்கட்டளை இயக்குனர் செல்வகுமார் தனது நிலத்தில் பொதுமக்கள் அத்துமீறி நுழைந்ததாக புகார் தெரிவித்தார்.
களக்காடு போலீசார் அங்கு சென்று குடிசை அமைக்க பொதுமக்கள் கொண்டு வந்த கம்புகள் மற்றம் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இலவச வீட்டு மனை பட்டா தரும்வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications