தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம்: 13-ம் தேதி வெளியிடுகிறார் நீதிபதி ரவிராஜபாண்டியன்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை வரையறுக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி, வரும் ஜூன் 13-ம் தேதி கட்டண விவரங்களை வெளியிடுகிறது.
தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்த ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 11,500 தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது.
கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தை கொண்டு பள்ளியை நடத்த இயலாது, உயர்த்தி தர வேண்டும் என்று 6400 தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. மேல் முறையீட்டு மனுக்கள் மீது ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் தனித் தனியாக அழைத்து விசாரித்தனர். கட்டணத்தை உயர்த்தி கேட்பதற்கான காரணங்கள் அதற்கான சான்றுகளை ஆய்வு செய்தனர். பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, ஆசிரியர் சம்பளம், நிர்வாக செலவு உள்ளிட்ட செலவினங்களுக்கான தணிக்கை சான்றை கமிட்டியில் உள்ள ஆடிட்டர்கள் ஆய்வு செய்தனர்.
6400 பள்ளிகள் மீதான விசாரணை முடிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து குழுவினர் பள்ளிகளில் செலவினங்கள் குறித்த ஆடிட்டர் அறிக்கையை ஆய்வு செய்து கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாத, தணிக்கை சான்று இல்லாத பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணமே பொருந்தும். மேல் முறையீடு செய்துள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 சதவீதம் வரை கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழுவினர் ஏறக்குறைய அனைத்து பணிகளையும் முடித்துவிட்டனர்.
இன்னும் 400 பள்ளிகளுக்கு ஆடிட்டர்கள் கையெழுத்திட வேண்டும். அந்த பணி மட்டுமே நிலுவையில் உள்ளது. அனைத்துப் பள்ளிகளும் 15-ந்தேதி திறக்கப்படுகிறது
இறுதி கட்ட பணி குறித்தும், புதிய கல்வி கட்டணம் வெளியிடுவது குறித்தும் நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.
இதில் புதிய கல்வி கட்டணம் கட்டண நிர்ணயம் குறித்த அறிவிப்பு 13-ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications