திருவாரூரில் அரசு பேருந்து கவிழ்ந்தது: ஒருவர் பலி, 21 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூரில் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானார். 21 பேர் படுகாயமடைந்தனர்.

திருவாரூரில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று 22 பயணிகளை ஏற்றிச் கொண்டு மன்னார்குடி நோக்கிச் சென்றது.

திருவாரூர் மேம்பாலம் இறக்கத்தின் அருகே சென்ற போது பேருந்தின் ஸ்டியரிங் திடீரென உடைந்தது. இதனால் பேருந்து 15 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் கூத்தாநல்லூர் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது (35) தலையில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

பேருந்து ஓட்டுநர் செல்வம், நடத்துநர் செந்தில்குமார் உள்பட 8 பேருக்கு எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 13 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி்கிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிக்ச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், நன்னிலம் எம்.எல்.ஏ. காமராஜ், நாகை கலெக்டர் முனியநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+