டெல்லி: லோக்பால் மசோதாவை கொண்டு வருவதில் அரசுக்கு ஆர்வம் இல்லாவிட்டால், தாமதம் செய்ய நினைத்தால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் குதிக்க நேரிடும் என அன்னா ஹஸாரே எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் அரசுக்கு ஆர்வம் இருப்பது போலத் தெரியவில்லை. அது தாமதப்படுத்தும் நோக்கில் நடந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், நான் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க நேரிடும்.
லோக்பால் மசோதாவையே கொண்டு வராமல் தடுக்க அரசு நினைப்பதாக கருதுகிறேன். இதை ஏற்க முடியாது என்றார் ஹஸாரே.
அன்னா ஹஸாரேவின் இந்த புதிய அறிவிப்பால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
With a dead end in sight for the Lokpal bill panel, Anna Hazare on Thursday threatened to go on a hunger strike again saying that the government is not interested in a strong bill. Upset with the government, Anna Hazare said that he will go on a fast again from August 15. "It looks like the Centre doesn't want to bring a strong Lokpal bill. It seems will have to go for a hunger strike again," said Hazare.