Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2ஜி விவகாரத்தில் தொடர்பு கொண்ட ப.சிதம்பரம் விலகியே தீர வேண்டும்-பாஜக

Subscribe to Oneindia Tamil

Prakash Javadekar
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளது. அவர் முன்பு நிதியமைச்சராக இருந்தபோது இந்த விவகாரம் தொடர்பான தனது நிலையை திடீரென மாற்றிக் கொண்டது ஏன் என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும். அவர் பதவியிலிருந்து விலகவும் வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரமும் பலனடைந்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரியான ராஜா என்பவர் நீரா ராடியாடவுன் தொலைபேசியில் பேசிய பேச்சு விவரம் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ராஜாவின் பேச்சு தவறானது, அவதூறானது என்று ரிலையன்ஸ் நிறுவனம் உடனடியாக மறுத்து விட்டது.

இந்த நிலையில் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2ஜி அலைக்கற்றையை 2001-ம் ஆண்டு விற்ற விலையில் 2008-ம் ஆண்டு விற்கக்கூடாது என 2007-ம் ஆண்டு டிசம்பர் வரை மத்திய நிதியமைச்சகம் கடிதங்கள், அறிக்கைகள் மூலம் வலியுறுத்தி வந்தது. நடப்பு சந்தை விலையை கருத்தில் கொண்டு அரசுக்கு சாதகமான விலையில்தான் விற்கவேண்டும் எனவும் நிர்பந்தித்து வந்தது.

ஆனால், 2008 ஜனவரி 15-ம் தேதி அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கடிதத்தில் தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார். அதாவது எதிர்காலத்தில் ஏல முறையை பின்பற்றியே அலைக்கற்றையை விற்கவேண்டும் என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அவர் இப்படி தனது நிலையை திடீரென மாற்றிக் கொண்டதற்கு காரணம் என்ன என்று அவர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இது கவனக்குறைவாகவோ அல்லது அறியாமையின் காரணமாகவோ நடந்ததாக கருத முடியாது.

பிறரது விருப்பத்திற்கிணங்க அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டதாகவே கருதுகிறோம். இதன் மூலம் 2008 ஜனவரி 15-ம் தேதி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்து அப்போதைய அமைச்சர் ஆ.ராசா பிறப்பித்த உத்தரவுக்கு நிதியமைச்சர் ஒப்புதல் அளித்ததாகவே கருதுகிறோம்.

அரசு ரகசியக் காப்பு சட்டத்தின் கீழ் வழக்கை சந்தித்துவரும் வி.பாலசுப்பிரமணியம் மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்திடமிருந்து மறுப்பு வருகிறது. இது குறித்து பாஜக மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது.

இதுபோல அவர் மறுப்புத் தெரிவிப்பதற்குப் பதிலாக, தான் திடீரென மனதை மாற்றிக்கொண்டது ஏன் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்கத் தயாரா? இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றவாளி யார் என அறிவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

அப்போதைய தகவல் தொடர்புத் துறை அமைச்சரும், நிதியமைச்சரும் 2001-ம் ஆண்டு விலையில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றையை விற்கலாம் என ஒப்புதல் அளித்திருந்ததால் பிரதமரும் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப. சிதம்பரம் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+