இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை
லண்டன்: ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் இந்தக் கோரிக்கையால், இலங்கைக்கு சர்வதேச அளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவத்தினர் அரங்கேற்றிய வக்கிரமான, குரூரமான, கோரமான கொலை வெறி இனவெறித் தாக்குதல்கள் உலக மக்களை பதை பதைக்க வைத்தன. ஆனாலும் இதுவரை இலங்கைக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட எடுத்து வைக்க உலக நாடுகள் முன்வராத அவல நிலை உள்ளது.
இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி தொடர்ந்து இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனவெறித் தாக்குதல்கள் குறித்த அதிர்ச்சிகரமான வீடியோப் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. தற்போது கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய படுகொலைச் சம்பவங்கள் குறித்த வீடியோ காட்சிகளை ஒரு டாக்குமெண்டரி போல தொகுத்துள்ளது சானல் 4 தொலைக்காட்சி. இதை சானல் 4 தொலைக்காட்சி செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பு செய்துள்ளது.
இந்த வீடியோக் காட்சிகள் பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் மனித உரிமை மீறல் அப்பட்டமாக நடந்துள்ளன. ஆகவே இதுகுறித்து இலங்கை சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும். இதை ஏற்காவிட்டால், இலங்கை மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் என்றார் அவர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications