ரூ.20 ஆயிரம் லஞ்சம்: திருச்சி ஆவின் பொதுமேலாளர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருச்சியில் ஆவின் நிறுவன பொதுமேலாளர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி ஆவின் நிறுவனத்தில் பணி செய்தவர் வி.வி.நாதன். இவர் பணி ஓய்வு பெற்ற பின், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொடர்பாக அணுகியபோது, திருச்சி ஆவின் நிறுவன பொதுமேலாளர் வீழிநாதன் இவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து வி.வி.நாதன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தெரிவித்தார். இன்று காலை வீழிநாதன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது, ஏற்கெனவே தயாராக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வீழிநாதனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications