இலங்கை அகதிகள் பொறியியல் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை!
மதுரை: தமிழ்நாட்டில் படித்த இலங்கை அகதிகளின் குழந்தைகள் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம் என உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2011-2012ம் கல்வியாண்டு முதல் இலங்கை அகதிகள் முகாம்களில் இருந்து பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ, பி.எட், மற்றும் முதுகலை பட்டப் படிப்பு எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்விலும் சேர்க்கை பெற விரும்பும மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமையிடத்து வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழுடனும்,
அகதிகள் முகாம்களில் பதிவு செய்யப் பெறாதவர்கள் அவர்களுடைய விசா மற்றும் கடவுச் சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், பொறியியல் கல்லூரிகளில் மற்ற மாணவர் சேர்க்கை முடிவுற்ற பின், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மிகாமலும், பொதுப்பிரிவின் கீழ் காலியிடங்கள் ஏதும் இருந்தால் அதில் இலங்கை அகதி மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications