உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மத்திய அரசின் உரக்கொள்கையால் உரங்களில் கட்டுபாடற்ற விலை உயர்வால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உரங்களின் விலைகளை அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உரங்களின் விலை நாளுக்கு நாள் உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

உர நிறுவனங்கள் விலை நிர்ணயிக்கம்போது உரக்கடைகளில் இருப்பு வைக்கப்படும் உரங்கள் குறைந்த விலைக்கு வழங்கப்படுவதில்லை. விலை உயர்வு நேரத்தில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட உரங்களை அதிக விலைக்கு விற்கின்றனர்.

அதாவது கடந்த மாதம் 550 ரூபாயாக இருந்த 50கிலோ கொண்ட டிஏபி உரம் மூட்டை தற்போது ரூ.650-ம், ரூ 275 ஆக இருந்த பொட்டாசியம் ரூ.320 ஆக உயர்ந்துள்ளது. இதை விவசாய துறை அதிகாரிகளும் முறையாக ஆய்வு செய்யாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமசந்திர ராஜா கூறுகையில், "மத்திய அரசின் உரக்கொள்கையால் உரங்களின் விலை நிலை இல்லாமல் உயர்கிறது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை கிடைக்காத நிலையில் அரசே விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை வினியோக்க வேண்டும்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+