For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசனவாயில் 14 தங்க கட்டிகளை கடத்திய நபர் கைது

Google Oneindia Tamil News

திருச்சி: இலங்கையில் இருந்து திருச்சி விமானம் மூலம் வந்த நபர் ஒருவர் தனது ஆசனவாய் பகுதியில் 14 தங்க கட்டிகளை கடத்தி வந்ததார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சிக்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

இந்த விமானத்தில் ஒருவர் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இலங்கை விமானத்தில் இருந்து வந்த பயணிகளிடம் அதிரடியாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ஒருவரின் ஆசனவாய் பகுதியில் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட 14 தங்க கட்டிகளை மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து அந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், இலங்கையை சேர்ந்த முகமது நஜிமுதீன் (50) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A Sri Lankan citizen has been arrested for smuggling gold biscuits in Trichy airport. He smuggled the gold through his anus. Slueths seized 14 gold biscuits from him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X