ஆசனவாயில் 14 தங்க கட்டிகளை கடத்திய நபர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: இலங்கையில் இருந்து திருச்சி விமானம் மூலம் வந்த நபர் ஒருவர் தனது ஆசனவாய் பகுதியில் 14 தங்க கட்டிகளை கடத்தி வந்ததார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சிக்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்து வந்தனர்.

இந்த விமானத்தில் ஒருவர் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இலங்கை விமானத்தில் இருந்து வந்த பயணிகளிடம் அதிரடியாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ஒருவரின் ஆசனவாய் பகுதியில் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட 14 தங்க கட்டிகளை மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து அந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், இலங்கையை சேர்ந்த முகமது நஜிமுதீன் (50) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+