அழுது கொண்டே இருந்ததால் மைக்ரோவேவ் ஓவனில் போட்டு குழந்தையைக் கொன்ற பெண்

அவரது பெயர் கா யாங். 29 வயதாகும் இவருக்கு மிராபெல்லி தாவோ லோ என்ற பிறந்து 6 வாரமே ஆன பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் போட்டு கொடூரமாக கொலை செய்தார் கா யாங்.
அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அவர் மீது குழந்தையைத் தாக்கியது மற்றும் கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 17ம் தேதி இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் உடலை மீட்ட போலீஸார் குழந்தையின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மிக மோசமான அளவில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்தனர். விவரிக்க முடியாத அளவுக்கு குழந்தையின் உடல் வெந்து போயிருந்ததாக அவர்கள் கூறினர்.
கொலை நடந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து தற்போது யாங் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரி லாரா பெக் கூறுகையில், குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிந்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இந்த சம்பவத்தையும் சேர்த்து, இதுவரை அமெரிக்காவில் மைக்ரோவேவ் ஓவனில் வைத்து குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்தமே மூன்றுதான் நடந்துள்ளதாம்.
குழந்தையைக் கொன்று பின்னர் மைக்ரோவேவ் ஓவனில் யாங் வைத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்வதற்கு முன்பு குழந்தையை அவர் தாறுமாறாக அடித்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. குழந்தை தொடர்ந்து அழுததால் அவர் இந்த வெறிச் செயலைச் செய்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து பெக் கூறுகையில், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. சம்பவத்தன்று வீட்டில் வேறு யாரும் இல்லை. யாங் மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு மன நல பரிசோதனை நடத்துவதா என்பதை கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications