பொங்கல் முதல் இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெ தீவிரம்

பொங்கல் முதல் இந்தத் திட்டத்தைத் தொடங்க அவர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற தனித் துறையை உருவாக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை என்ற இந்தத் துறை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றும் பணியை துவங்கியுள்ளது.
முதல் கட்டமாக ஏழைப் பெண்களுக்கு திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு பயனாளிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அடுத்தபடியாக ரேசன் கார்டுகள் உள்ள அனைவருக்கும் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்துக்கும், கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்துக்கும் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த டெண்டர்கள் ஜூலை 11ம் தேதி திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்தத் திட்டங்கள் அமலுக்கு வருகின்றன.
இந் நிலையில் இன்னொரு முக்கிய திட்டமான கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக கறவை மாடுகளும், நான்கு ஆடுகளும் அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றும் பணியை முதல்வர் ஜெயலலிதா துவக்கியுள்ளார்.
இத் திட்டத்தின்படி 6,000 கிராமங்களில் 60,000 பசுக்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும் 2.4 லட்சம் ஆடுகளும் வழங்கப்படும். இதன்மூலம் பால் உற்பத்தியை நான்கு மடங்காக்க, அதாவது 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று நடத்தினார். இதில் மூத்த அமைச்சர்கள் தவிர, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் செயலாளர்கள் ஷீலா ப்ரியா, ராம மோகன ராவ், வெங்கடரமணன், சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை செயலாளர் சிவதாஸ் மீனா, பால், மீன்வளம், கால்நடைத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த இலவச மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தை வரும் பொங்கல் அன்று தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்த பட்டியலோடு, தமிழகத்தில் தொடங்கவுள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் கிடைக்கும் விவரத்தையும் சேர்த்து இந்தத் திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications