திமுக எம்.பி். கனிமொழிக்கு ஜாமீன் தரவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! - மொட்டைக் கடுதாசியால் பரபரப்ப

Subscribe to Oneindia Tamil

கரூர்: திமுக எம்.பி். கனிமொழிக்கு ஜாமீன் தரவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும் என்று கரூர் அரசு மருத்துவ மனைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான, கனிமொழியையும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குார் ரெட்டியும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கனிமொழி ஜாமீனுக்காக திமுக தரப்பு பாட்டியாலா கோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. ஆனால் ஜாமீன் கிடைத்த பாடு இல்லை.

இந்த நிலையில், கம்யூட்டிரில் டைப் செய்யப்பட்ட மொட்டைக் கடிதம் ஒன்று கரூர் அரசு மருத்துவ மனைக்கு வந்தது.

அதில் கரூர் அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளோம். இந்த குண்டு வெடிக்காமல் இருக்க வேண்டும் என்றால், திமுக எம்.பி. கனிமொழிக்கு ஜாமீன் வழங்க வேண்டும், சமச்சீர் கல்வியை அமுல்படுத்த வேண்டும். இல்லை என்றால் வெடிகுண்டு வெடிக்கும் என அந்த கடித்தில் குண்டு குறிப்பிடப்பட்ருந்தது.

உடனே போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் கொடுக்க, அவர்கள் மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள் சகிதம் வந்து மருத்துவமனையை தீவிரமாக சோதனை நடத்தினர்.

இந்த தகவல் அறிந்த உள்நோயாகளும், வெளி நோயாளிகளும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால், போலீசாரின் சோதனை முடிவில் அந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மொட்டை கடுதாசி போட்ட பார்ட்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+