மத்திய அரசுடன் பேச்சு தோல்வியடைந்தால் காலவரையற்ற ஸ்டிரைக்-லாரி அதிபர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஜூன் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்போம் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் நல்லதம்பி கூறுகையில்,
லாரி உதிரி பாகங்கள், டயர் விலை உயர்வு காரணமாக ஏற்கெனவே லாரி தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் டீசல் விலையை ரூ.3 அதிகரிப்பதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும். டீசல் விலையை திடீரென உயர்த்திய மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவிக்கிறது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் பல்வேறு விதமான வரிகளால் அவற்றின் விலை அதிகரிக்கிறது. இந்த வரிகளை குறைப்பதால் டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியும். ஆனால், அத்தகைய நடவடிக்கையில் மத்திய அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஈடுபடுவதில்லை.
இப்போது ஒரு லிட்டர் டீசலுக்கு உயர்த்தப்பட்டுள்ள ரூ.3-க்கு தமிழக அரசு சார்பில் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படும். இதனால் டீசல் விலை மேலும் 66 காசுகள் உயரும். மத்திய அரசு விரி விலக்கு அளிக்காவிட்டாலும், மாநில அரசு மதிப்புக் கூட்டு வரியை குறைக்க வேண்டும்.
டீசல் விலை உயர்வு குறித்து ஜூன் 27ம் தேதி திங்கள்கிழமை டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளும், மத்திய அரசின் உயரதிகாரிகளும் பங்கேற்பர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவர் என்றார் நல்லதம்பி.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications