பாபநாசம் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு: மதுபாட்டில்கள் உடைப்பு
விகேபுரம்: குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்ததால் பாபநாசம் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. வன சோதனைச் சாவடிகளி்ல் சோதனைக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் ஆமை வேகத்தில் போக்குவரத்து நகர்ந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசத்தில் அகஸ்தியர் அருவியும், பாபநாசம் அணைப்பகுதியில் பாணதீர்த்த அருவியும் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் கணிசமாக இருக்கும். நேற்று விடுமுறை நாள் என்பதாலும், குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்ததாலும் பாபநாசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
பாபநாசம் வன சோதனைச் சாவடியில் வனவர் சுப்புராவ் தலைமையில் வனக்காப்பாளர் முருகேசன், பிச்சை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். நேற்று காலையிலிருந்து மதியம் வரை சுமார் 800-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாறையில் உடைக்கப்பட்டது.
வனப்பகுதிக்கு மதுபானங்கள் கொண்டு செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தும் அதை மீறி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மதுபானத்துடன் வருகின்றனர். நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் வந்த கார்கள் சோதனைச் சாவடிகளில் இருந்து பாரபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வரை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications