இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட 23 தமிழக மீனவர்களும் ஜூலை 1ல்தான் விடுதலை?
கொழும்பு: கைது செய்யப்பட்டு மன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான முடிவை இன்று இலங்கை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூலை 1ம் தேதிதான் அதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்து விட்டது.
இதனால் 23 தமிழக மீவர்களும் தாயகம் திரும்புவது தள்ளிப் போயுள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 தமிழக மீனவர்களையும், அவர்களின் 5 படகுகளையும் சிறை பிடித்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மன்னார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. மீனவர்களும் காலவரையற்ற போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து மத்திய அரசு, இலங்கைக்கு நெருக்குதல் கொடுத்தது. இதன் விளைவாக 23 பேரும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவர் என இலங்கை அறிவித்தது.
இந்த நிலையில் இன்று மீனவர்களின் விடுதலை தொடர்பாக இலங்கை அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜூலை 1ம் தேதிதான் இதுகுறித்து முடிவு அறிவிக்கப்படும் என திடீரென இலங்கை கூறியுள்ளது.
23 மீனவர்களும் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை ஜூலை 1ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் அன்றுதான் அவர்களை விடுவிப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என இலங்கை காரணம் கூறியுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications