ஏர் இந்தியா: ஜூன் இறுதியில் கிடைத்த மே மாத சம்பளம்!

நஷ்டம், கடன் சுமை என தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவில் 40 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மே மாதம் தரப்பட வேண்டிய சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. நிதி அமைச்சகத்திடமிருந்து பணம் வராததால் தாமதமாவதாக கடந்த ஜூன் 11-ம் தேதி சொல்லப்பட்டது. தொடர்ந்து காரணங்களை மட்டுமே கூறிவந்த ஏர் இந்தியா, எப்போது சம்பளம் தரப்படும் என்பதை மட்டும் சொல்லாமல் இருந்தது.
இதனால் கடுப்பான ஊழியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப் போவதாக எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து 24 அல்லது 25-ம் தேதி வழங்குவதாக நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அந்த தேதிகளிலும் வழங்கவி்ல்லை.
இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டது. ஊழியர்கள் பெரும் நிம்மதியடைந்தாலும், அடுத்த மாதமும் இந்த தாமதம் தொடருமோ என்ற அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications