For Daily Alerts
Just In
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் முகம்மது ஜான்
தமிழக அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த மரியம் பிச்சை மரணமடைந்தார். இதையடுத்து அவரது காலி இடத்திற்கு சமீபத்தில் ராணிப்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. முகம்மது ஜான் பெயரை முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் ஆளுநர் பர்னாலா அறிவித்தார்.
இன்று முகம்மது ஜான் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஜானுக்கு, ஆளுநர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அமைச்சர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English summary
Ranipet ADMK MLA Mohammed Joh took oath as Minister today. Governor Barnala conducted the swearing in ceremony. CM Jayalalitha, Speaker Jayakumar and ministers attended the function.
Story first published: Wednesday, June 29, 2011, 17:02 [IST]