For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் பத்திரிக்கையாளர் ரபி பெர்னார்ட் போட்டியிடுகிறார்

Google Oneindia Tamil News

Rabi Bernard
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரா அதி்முக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்த அதிமுகவைச் சேர்ந்த கே.வி.ராமலிங்கம் மாநில அமைச்சரானதால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் காலியான இடத்திற்கு ஜூலை 22ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடத்தில் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக முயன்றன. தனது மனைவி பிருந்தா காரத்துக்கு இந்த இடத்தை வாங்கி விட சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கடுமையாக முயன்றார். இருப்பினும் அங்கு தற்போது அதிமுகவே போட்டியிடவுள்ளது.

அதிமுக வேட்பாளராக ஏ.வில்லியம் ரபி பெர்னார்டை ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவர் பிரபல பத்திரிக்கையாளர் ஆவார். தற்போது ஜெயா டிவியில் பணியாற்றி வருகிறார். குமுதம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் பணியாற்றியுள்ளார்.

English summary
Rabi Bernard is the ADMK candidate for Rajya Sabha polls to be held on July 22. Party general secretary and CM Jayalalitha has announced this today. Rabi Bernard is bacically a journalist, who is working for Jaya TV for the last few years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X