ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் பத்திரிக்கையாளர் ரபி பெர்னார்ட் போட்டியிடுகிறார்
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்த அதிமுகவைச் சேர்ந்த கே.வி.ராமலிங்கம் மாநில அமைச்சரானதால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் காலியான இடத்திற்கு ஜூலை 22ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடத்தில் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக முயன்றன. தனது மனைவி பிருந்தா காரத்துக்கு இந்த இடத்தை வாங்கி விட சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கடுமையாக முயன்றார். இருப்பினும் அங்கு தற்போது அதிமுகவே போட்டியிடவுள்ளது.
அதிமுக வேட்பாளராக ஏ.வில்லியம் ரபி பெர்னார்டை ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவர் பிரபல பத்திரிக்கையாளர் ஆவார். தற்போது ஜெயா டிவியில் பணியாற்றி வருகிறார். குமுதம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் பணியாற்றியுள்ளார்.












Click it and Unblock the Notifications