இலங்கையில் விடுவிக்கப்பட்ட 23 மீனவர்களும் இன்றும் ராமேஸ்வரம் திரும்புகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களும் இன்று இரவுக்குள் ராமேஸ்வரம் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 20ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை வளைத்த இலங்கைக் கடற்படையினர் 23 மீனவர்களையும், அவர்களது 5 படகுகளையும் மட்டும் சிறை பிடித்து இலங்கைக்குக் கொண்டு சென்று விட்டனர்.

பின்னர் அவர்களை தலைமன்னார் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 23 மீனவர்களும் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க

உத்தரவிடப்பட்டனர். அனைரும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மீனவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மத்திய அரசை வலியுறுத்தியது. இதன் விளைவாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பயனாக 23 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.

அதன்படி நேற்று 23 மீனவர்களையும் விடுவிக்கலாம் என்று கூறும் அரசின் கடிதத்தை தலைமன்னார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து 23 பேரையும் விடுதலை செய்து நீதிபதி கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார்.

இன்று காலை 23 மீனவர்களையும் இலங்கை கடல் எல்லை வரை கொண்டு இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். அதன்படி மீனவர்கள் ஒப்படைக்கப்படவுள்ளனர். அதன் பின்னர் இன்று மாலை அல்லது இரவுக்குள் அவர்கள் தமிழகம் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+