சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமி பலாத்காரம்: கூலித் தொழிலாளி கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளியை போலீசார் இன்று கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் அபிராமி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இவரது தந்தை மாடசாமி நெல்லை பழைய பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். அவரை பார்க்க கடந்த 5-ம் தேதி சுந்தர்ராஜன் பழைய பேட்டை பகுதிக்கு வந்தார். அப்போது அவரது தந்தையின் வீட்டருகே ஏராளமான சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் 2-ம் வகப்பு படிக்கும் 7 வயது சிறுமியான செல்வியை பார்த்ததும் சுந்தர்ராஜனுக்கு சபலம் ஏற்பட்டது. அவர் சிறுமியிடம் நைசாக பேசி தனது தந்தையின் வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விளையாடச் சென்ற தனது மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியின தாய் தேடினார். அப்போது சிறுமி அழுது கொண்டே ஓடி வந்தாள். அவளிடம் விசாரித்தபோது சுந்தர்ராஜன் தன்னிடம் தவறாக நடந்தது குறித்து தாயிடம் கூறினாள். சுந்தர்ராஜனை கண்டிக்க அப்பகுதியினர் திரண்டு சென்றனர். அதற்குள் அவர் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலா, ராபர்ட் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுந்தர்ராஜனை போலீசார் இன்று கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+