குரோவர் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மரியா சிறையிலிருந்து விடுதலை

Subscribe to Oneindia Tamil

Maria Susairaj
டெல்லி: டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, அந்த காலத்தை ஏற்கனவே கழித்து விட்டதால் விடுவிக்கப்படலாம் என கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட கன்னட நடிகை மரியா சூசைராஜ் இன்று மும்பை, பைகுல்லா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையாகி வெளியே வந்ததும் காத்திருந்த வெள்ளை நிறக் காரில் ஏறி பறந்து விட்டார் மரியா.

பைகுல்லா சிறைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அசம்பாவித சம்பவம் ஏதேனும் நடந்து விடாமல் தடுக்க பாதுகாப்பை போலீஸார் பலப்படுத்தியிருந்தனர்.

நீரஜ் குரோவர் கொலை வழக்கில், கொலையாளியான தனது காதலர் ஜெரோமுடன் இணைந்து குரோவரின் உடலை துண்டு துண்டாக வெட்டியதாக மரியா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மரியாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையை நேற்று நீதிபதி அறிவித்தார். ஆனால் அவர் ஏற்கனவே சிறையில் அந்தக் காலத்தை கழித்து விட்டதால் அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இன்று மரியா விடுதலை செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+