லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியுடன் ஓடிய தமிழர்
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதற்கு அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த 3வது ஒரு நாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. அப்போது இலங்கையைக் கண்டித்து தமிழர்கள் லார்ட்ஸ் மைதானத்தில் திரண்டிருந்தனர். இதனால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
பெரும் திரளாக கூடியிருந்த தமிழர்கள், இலங்கையின் இனப்படுகொலையை விளக்கும் பதாகைகளை ஏந்தியபடியும், தமிழ் ஈழக் கொடிகளை பிடித்தபடியும் நின்றிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஈழத் தமிழர்களின் இந்தப் போராட்டத்திற்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது. பலரும் தமிழர்களிடம் நின்று விசாரித்து பிரச்சினையை கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் திடீரென ஒரு தமிழ் இளைஞர் லார்ட்ஸ் மைதானத்திற்குள் தமிழ் ஈழக் கொடியை வானில் அசைத்தபடி ஓடத் தொடங்கினார். இதை எதிர்பார்க்காத பாதுகாவலர்கள் அவரைப் பிடிக்க ஓடினர். ஆனால் அவரோ டேக்கா கொடுத்தபடி மைதானத்தை ஒரு சுற்று சுற்றி ஓடி வந்தார். தமிழ் ஈழக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி அந்தத் தமிழர் ஓடியதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தது. இலங்கையின் லசித் மலிங்கா பந்து வீசிக் கொண்டிருந்தார். 46வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே புகுந்து அவர் ஓடியபோது அவரைப் பார்த்து இலங்கை வீரர்கள் அமைதியாக நின்றனர். அந்தத் தமிழரோ, இலங்கை வீரர்கள் மீது தனது நிழல் கூட படாத வகையில் ஓடினார்.
பின்னர் அந்தத் தமிழ் இளைஞரை எம்.சி.சி பெவிலியன் முன்பு வைத்து பாதுகாவலர்கள் பிடித்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.
அந்தத் தமிழர் ஈழக் கொடியுடன் ஓடியபோது மைதானத்தில் கூடியிருந்த பலரும் உற்சாகத்துடன் குரல் எழுப்பிக் கை தட்டியது குறிப்பிடத்தக்கது.
போட்டியைக் காண இலங்கைக்கான துணைத் தூதர் அம்சாவும் லார்ட்ஸ் வந்திருந்தார். இந்த சம்பவத்தால் பேயறைந்தது போலாகி விட்டது அவரது முகம். உடனடியாக அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் அவர் புகார் கொடுத்தார்.
படம் நன்றி: தமிழ்நெட்
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை













Click it and Unblock the Notifications