பத்மநாபசாமி கோவில் நகைகள் கணக்கெடுப்பை வீடியோல் படமாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்றுத்தான் ஆய்வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது ஆய்வு நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுந்தரராஜன் இன்னொரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நகைகள் உள்ளிட்ட அரிய பொருட்களின் கணக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அவற்றைப் பாதுகாப்பாக வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சுந்தரராஜனின் கோரிக்கையை ஏற்றது. இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தற்போது நடந்து வரும் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்த ஆய்வுப் பணிகளை, நகைகள் கணக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இந்த நகைகளின் உண்மையான மதிப்பு உள்ளிட்டவற்றை கண்டுபிடிப்பதற்காக தொல்பொருள் வல்லுநர் குழுவை அமைக்கலாம் என்று யோசிக்கிறோம். எனவே இதுதொடர்பாக தொல்பொருள்துறை அதிகாரிகளின் பெயரை மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும்.
மேலும் இந்த நகைகளை திருவனந்தபுரம் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கும் திட்டம் உள்ளது, பாதுகாப்பு குறித்த திட்டம் உள்ளதா என்பது குறித்தும் மத்திய அரசு வருகிற வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications