பெனாசிரை நான் காதலிக்கவில்லை, எனது 'கசின்'தான் காதலித்தார்-இம்ரான்

ஒரு காலத்தில் பிளே பாய் ஆக இருந்தவர் இம்ரான். உலகின் பல்வேறு பிரபலங்களுடன் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். அதேபோல அவருக்கும், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கும் இடையே காதல் இருந்ததாக ஒரு செய்தி முன்பு வெளியானது.
இம்ரான் கானின் சுயசரிதையை எழுதிய இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர், 1970ம் ஆண்டு இம்ரான் கான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அப்போது பெனாசிரும் அங்கு படித்தார். அந்த சமயத்தில் இம்ரான் மீது பெனாசிருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே செக்ஸ் உறவும் கூட இருந்தது. இது இம்ரானின் தாயாருக்குத் தெரிய வரவே அவர் திருமணம் நடத்தி வைக்க முயன்றார். ஆனால் அது கை கூடவில்லை என்று கூறியிருந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்தத் தகவலை உடனடியாக இம்ரான் கான் மறுத்தார். இந்த நிலையில் இன்னொரு இம்ரான் கான் சுயசரிதை வெளியாகியுள்ளது. இதை இந்தியாவைசத் சேர்ந்த பிராங்க் ஹூசூர் என்பவர் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ஹூசூரிடம் இம்ரான் கான் கூறுகையில், எனக்கும், பெனாசிருக்கும் இடையே இருந்தது பரஸ்பரம் அன்புதான். இருவருக்கும் இடையே இருந்தது அது மட்டுமே. வேறு எதுவும் இல்லை. இருவரும் நல்ல அன்பு வைத்திருந்தோம், நல்ல நண்பர்களாக இருந்தோம்.
பெனாசிர் எனது தனிப்பட்ட தோழி. என்னை அவர் மிகவும் மதித்தார். எனது உள் உணர்வுகளை மதித்தார். அதேசமயம், எனது ஒன்று விட்ட சகோதரர் ஒருவருக்கு பெனாசிர் மீது ஈர்ப்பு இருந்தது. அவரை நான் பெனாசிருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அதன் பின்னர் பெனாசிருக்கும் கூட அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. திருமணப் பேச்சுக்கள் கூட எழுந்தன. ஆனால் அது கை கூடவில்லை.
அவருக்கு அரசியல் மீது ஈர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அரசியல் அவரைத் தேடி வந்தபோது அதற்கேற்றபடி மாறிக் கொள்ள அவரால் முடிந்தது. பாகிஸ்தானின் மிகப் பெரிய தலைவராக அவர் திகழ்ந்திருக்க வேண்டியவர். துரதிர்ஷ்டம் அவரை துரத்திக் கொண்டு வந்ததால் அது முடியாமல் போய் விட்டது. இடி முழக்கம் போல பேசக் கூடியவர் பெனாசிர். அது எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று. அவரிடம் அது இருந்தது. தனது பேச்சால் அத்தனை பேரையும கட்டிப் போடும் திறமை படைத்தவர் பெனாசிர் என்று கூறியுள்ளார் இம்ரான்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications