நில அபகரிப்பு வழக்கு-வீரபாண்டி ஆறுமுகம் மகனுக்கு முன்ஜாமீன் மறுப்பு
சேலம்: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஏ.ராஜாவுக்கு சேலம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
ராஜா மீது முத்துக்குமார் என்பவர் சேலம் சரக டிஐஜி வெங்கட்ராமனை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில், ராஜா மீது அவர் நில அபகரிப்புப் புகாரை கூறியிருந்தார். மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் திடீரென மீண்டும் டிஐஜியை சந்தித்த முத்துக்குமார் தனது புகாரை திரும்பப் பெறுவதாக கூறி மனு கொடுத்தார்.
இருப்பினும் சேலம் போலீஸார் ராஜா மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி சேலம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராஜா. இதை நேற்று விசாரித்த நீதிபதி பாஸ்கர், விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் அவர் ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள போலீஸாரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் மறுக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து ராஜாவைக் கைது செய்ய போலீஸார் மும்முரமாக களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications