இஸ்ரோ- ஆண்ட்ரிக்ஸ் தலைவராக விஞ்ஞானி ஹெக்டே நியமனம்
பெங்களூர்: இந்திய விண்வெளி ஆராச்சி மையமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக வி.எஸ். ஹெக்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய செயற்கைக் கோள்களில் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை மிகக் குறைந்த விலைக்கு திவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கி நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக புகாரில் சிக்கியது இந்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சொற்ப லாபமே ஈட்டும் இந்த நிறுவனம் தனது லாபத்தில் இருந்து சுமார் 8 சதவீத பணத்தை ஒதுக்கி, அதில் தலா 4 கிராம் எடை கொண்ட 15,600 தங்க காசுகளை வாங்கி அதை தனது ஊழியர்களுக்கு பரிசாக வழங்கிக் கொண்டது.
இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான இந்த அமைப்பின் தலைவராக இப்போது ஹெக்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்ரோவின் தொலையுணர்வு செயற்கைககோள்கள் பயன்பாடுகள் திட்டத்தின் (Remote sensing applications) மூத்த விஞ்ஞானியாவார்.
மேலும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் அறிவியல் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது நியமனம் குறித்த அறிவிப்பை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இன்று பெங்களூரில் வெளியிட்டார். இதற்கு முன் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கு முழு நேரத் தலைவர் இருந்ததில்லை. அந்தப் பொறுப்பை இஸ்ரோ தலைவரே கவனித்து வந்தார்.
இந் நிலையில் பல சிக்கல்களி்ல் இந்த அமைப்பு மாட்டியதால், அதற்கு தனியாக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications