கராச்சி கலவரம்: 103 பேர் பலி

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், முத்தாஹிதா குவாமி கட்சிக்கும் இடையே மோதல் பெரும் கலவரமாக மாறியது. கடந்த 6 நாட்களாக அங்கு தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது.
கலவரக்காரர்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்று வருகின்றனர். இதனால் அங்கு சாவு எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
கலவரத்தை அடக்க போலீசார் பயன்படுத்தப்பட்டு வந்தனர். கலவரக்காரர்களை அவர்களால் அடக்கி ஒடுக்க முடியவில்லை.
எனவே அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. பெரிதும் பாதிக்கப்பட்ட ஓரங்கி, காஸ்பா காலனி, கட்டிபஹாரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர்.
கலவரம் காரணமாக வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் சிக்கி தவிக்கும் மக்களை அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications