பத்மநாபசாமி கோவில் நகைகள் அரசுக்கோ பக்தர்களுக்கோ சொந்தமானதல்ல! - கேரள ராணி பேட்டி

திருவனந்தபுரத்தில் உள்ள பழமையான பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய நிலவறைகள், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திறக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே 5 அறைகள் திறக்கப்பட்டபோது, அதில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள் குவியல் குவியல்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 6-வது அறையை திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது. பத்மநாபசாமி கோவிலை கேரள அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேரள மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி இருந்தது. இதை எதிர்த்து திருவாங்கூர் சமஸ்தான இளவரசர் ராஜ மார்த்தாண்ட வர்மா, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலுக்கு திருவாங்கூர் ராஜ வம்சத்தை சேர்ந்த ராணி கவுரி லட்சுமி பாய், நேற்று திடீரென்று வருகை தந்தார்.
பின்னர் கோவில் தலைமை சாமியார் ஸ்ரீலட்சுமி வரதீர்த்த சுவாமியை சந்தித்து பேசினார். அதன்பிறகு கவுரி லட்சுமி பாய் நிருபர்களுக்கு பேட்டி:
"திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள நகைகள் புதையல் அல்ல. அவை அனைத்தும் கடவுளுக்கு சொந்தமான சொத்து. பக்தர்களுக்கோ, அரசாங்கத்துக்கோ சொந்தமானது அல்ல. கோவில் சொத்து விஷயத்தில் அரசு தலையிட கூடாது. ராஜவம்சத்தினர் யாரும் இதற்கு உரிமை கோரவும் மாட்டார்கள்.
இப்பிரச்சினையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை.
இப்போது கண்டு எடுக்கப்பட்டுள்ள நகைகளுக்கு அரச குடும்பம் உரிமை கோரவில்லை. இச்சொத்துக்களை போலீஸ் அல்லது கமாண்டோ மூலம் அரசு பாதுகாக்க வேண்டும்," என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications