1, 449 நில மோசடி புகார்கள்: உடனடி நடவடிக்கைக்கு ஜெயலலிதா உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: நில மோசடி புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஏராளமானோர் நில மோசடி புகார்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர். இதுவரை ஆயிரத்து 449 பேர் நில மோசடி புகார்கள் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் நில மோசடி புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நிலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நில மோசடி தொடர்பாக காவல் நிலையங்களில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டது.

நில மோசடி புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அன்மைக் காலமாக தினமும் குறைந்தது ஒருவராவது நில மோசடி வழக்கில் கைதாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+