மாணவியிடம் தவறாக நடந்த தமிழாசிரியரை அடியாட்களுடன் போய் அடித்து உதைத்த பெற்றோர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில், 8ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்த தமிழ் ஆசிரியரை, அடியாட்களை கூட்டிக் கொண்டு போய் சரமாரியாக அடித்து உதைத்தனர் பெற்றோர்கள். தடுக்க வந்த ஆசிரியர்களுக்கும் அடி உதை விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, வண்ணாரப்பேட்டையில் சி.இ மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு தமிழ் ஆசிரியராக இருப்பவர் பன்னீர். இவர் தான் பாடம் சொல்லித் தரும் 8ம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியுற்ற அந்த மாணவி தனது பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனால் கடும் கோபமுற்ற பெற்றோர், பலரை கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றனர். ஆசிரியர் பன்னீரைப் பார்த்து அவரை சரமாரியாக திட்டியபடி அடித்து உதைத்தனர்.

கிட்டத்தட்ட 30 பேர் சேர்ந்து ஆசிரியரை அடிப்பதைப் பார்த்த சக ஆசிரியர்கள் ஓடி வந்து அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கும் சரமாரியாக அடி உதை விழுந்தது. அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து தாக்கியவர்கள விலக்கி விட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+