மும்பை குண்டுவெடிப்பு எதிரொலி- தென்மாவட்டங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
நெல்லை: மும்பை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து தென்மாவட்டங்களில் போலீஸ் ரோந்து பணி, சோதனை சாவடிகளில் வாகன சோதனைகள் ஆகியவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் நேற்று தொடர் குண்டு வெடிப்பில் 22 பேர் பலியாகினர். இதனையடுத்து நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கும்படி மத்திய உளவு துறையினர் அனைத்து மாநில உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தமிழக போலீஸ் டிஜிபி ராமனூஜம், சட்டம் ஓழுங்கு துணை கமிஷனர் ஜார்ஜ், உளவுத்துறை ஏடிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களில் போலீசார் ரோந்து பணிகள் மற்றும் வாகன சோதனை சாவடிகளில் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உளவுத்துறையினரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் பாதுகாப்பு
தென்மண்டல ஐஜி மஞ்சுநாதா உத்தரவின்பேரில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 10 மாவட்டங்களில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை சரக டிஐஜி பொறுப்பு வரதராஜூலு உத்தரவின்பேரில் நெல்லை மாநகரம், மாவட்டம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பகுதிகளில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிக்கள் நெல்லை வியேந்திர பிதாரி, தூத்துக்குடி நாரேந்திர நாயர், கன்னியாகுமரி அருண், மாநகரத்தில் துணை கமிஷனர்கள் மார்க்ஸ் ஸ்டான்லியோ ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனைகளில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் புளியரை, காவல்கிணறு, கங்கைகொண்டான் மற்றும் மாநகரத்தில் பாளை டக்கரம்பாள்புரம், கருங்குளம், தாழையுத்து, பாளை கேடிசி நகர், பேட்டை ஆகியவற்றிலுள்ள சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications