1993ம் ஆண்டு முதல் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் நீடித்து வரும் ஜாவேரி பஜார்

நேற்று மாலை மும்பையில் ஜாவேரி பஜார், ஒபரா ஹவுஸ் மற்றும் கபூதர்கானா ஆகிய 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் அதிகம் பேர் உயிரிழந்த ஜாவேரி பஜார் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் உள்ளது. அங்கு முதன்முறையாக 1993-ம் ஆண்டு குண்டுவெடித்தது.
கடந்த 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 257 பேர் பலியாகினர், சுமார் 700 பேர் காயமடைந்தனர். அப்போது தான் தீவிரவாதிகள் முதன்முதலாக ஜாவேரி பஜாரை குறிவைத்தனர். அப்போது அங்கு ஒரு ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த குண்டை போலீசர் வெற்றிகரமாக அகற்றிவிட்டனர்.
1993-ம் ஆண்டில் ஜாவேரி பஜார் காப்பாற்றப்பட்டாலும், கடந்த 2003-ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் அங்கு நடந்த குண்டுவெடிப்பில் 54 பேர் கொல்லப்பட்டனர்.
ஜாவேரி பஜாரில் ஏராளமான கடைகள் உள்ளன. நடக்கக்குட வழியில்லாத அளவுக்கு ஜனநடமாட்டமுள்ள பகுதி.
ஜாவேரி பஜாரில் உள்ள பிரபல உணவகத்திற்கு வெளியே நேற்று குண்டுவெடித்தது. அலுவலகம் விட்டுச் செல்பவர்கள் இந்தக் கடையில் வந்து சாப்பிடுவது வழக்கம். இந்த பஜார் பொதுவாக மாலையில் தான் கூட்டமாக இருக்கும்.
மும்பை குண்டுவெடிப்பு - மேலும் செய்திகள்












Click it and Unblock the Notifications