மும்பை: மும்பையில் குண்டுவெடிப்பு நடந்த ஓபரா ஹவுஸ் பகுதியில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நான்கு பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். கண்காணிப்பு கேமராவில் அவர்கள் பதிவாகியுள்ளனர். அவர்கள் யார், என்ன பேசிக் கொண்டிருந்தனர் என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும், என்ஐஏ குழுவினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் குண்டுவெடிப்பு நடந்த ஓபஹா ஹவுஸ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரகசியக் கண்காணிப்பு கேமராவில் ஒரு காட்சி பதிவாகியுள்ளது. அதில் நான்கு பேர் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போனில் பேசிக் கொண்டிருந்த காட்சி பதிவாகியுள்ளது.
இது முக்கியத் துப்பாக கருதப்படுகிறது. அந்த நால்வரும் ஏன் இத்தனை நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.என்ன பேசிக் கொண்டிருந்தனர், இவர்கள் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இவர்கள் நான்கு பேரும் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்தபடி பேசிக் கொண்டிருந்துள்ளனர். இவர்கள் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Investigators pegging away at the evidence gathered from the three Mumbai blasts sites have got what might be a crucial clue on the serial blasts. Close Circuit Television (CCTV) footage from near the Opera House blast site shows three to four people talking on the phone for over 90 minutes at the same spot, Intelligence sources told. Seventeen people have died - 11 of those in the Opera House blast. That bomb and the ones at the other two sites - Zaveri Bazaar and Dadar - were Improvised Explosive Devices (IEDs), prepared with a deadly mixture of ammonium nitrate, Tri-Nitro Toluene (TNT) and fuel oil.