ராஞ்சியில் சிமி இயக்க தீவிரவாதி வீட்டில் என்ஐஏ அதிரடி சோதனை

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சிமி இயக்கத்தைச் சேர்ந்த மான்ஷெர் ஆலம் என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மான்சர் ஆலமுக்கு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளதால் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.

சிமி அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டதாகும். மான்ஷெர் ஆலம், 2007ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர். இந்த நிலையில் அங்கு என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக உ.பி. மற்றும் கர்நாடக மாநில போலீஸாரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்பு கொண்டு சில முக்கியத் தகவல்களைக் கோரியுள்ளதாக தெரிகிறது.

கர்நாடகத்தைச் சேர்ந்த சிலர் குறித்த தகவல்களும் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல உ.பியில் சிமி இயக்கத்தவர்கள் மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள் குறித்த தகவல்களும் கோரப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+