25 ஆயிரம் பிஇ இடங்கள் காலியாக இருக்கும்: மன்னர் ஜவகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 502 பொறியியல் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொது கலந்தாய்வு நடந்து வருகிறது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. மன்னர் ஜவகர் கூறியதாவது,

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் நிர்வாக ஒதுக்கீட்டில் இருக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களுக்கு தற்போது கலந்தாய்வு நடந்து வருகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் இந்த கலந்தாய்வில் இது வரை 24 ஆயிரத்து 61 பேர் தங்கள் விருப்ப இடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 856 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தை தேர்வு செய்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 133 பேரும், சுயநிதி கல்லூரிகளில் 16ஆயிரத்து 72 பேரும் சேர்ந்துள்ளனர். இன்னும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 182 இடங்கள் உள்ளன.

இதில் சுமார் 20 முதல் 21 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கக்கூடும். இதேபோன்று கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டில் 5 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. மொத்தம் 25 ஆயிரம் பிஇ இடங்கள் காலியாக இருக்கும். கடந்த ஆண்டு 8 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தது.

இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான மாணவர்கள் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பிரிவைத் தான் விரும்பி எடுத்துள்ளனர். தற்போது மெக்கானிக்கல் பிரிவுக்கு அதிக வேலைவாயப்புகள் உள்ளதால் அந்த பிரிவையும் கணிசமான மாணவர்கள் எடுத்துள்ளனர்.

எந்த பிரிவை எடுத்தாலும் சரி மாணவர்கள் பாடங்களைப் புரிந்து கொண்டு படித்தால் வாழ்வில் நன்றாக இருக்க முடியும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+