சங்கரராமன் கொலையில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை- ஜெயேந்திரர்

சங்கரராமன் கொலை வழக்கு மிக மிக நிதானமாக, மெதுவாக நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் சாட்சிகள் விசாரணையும், குறுக்கு விசாரணையும் முடிவடைந்தது.
இனி அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.
இதற்காக ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் ராமசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஜெயேந்திரர், விஜேயந்திரர், அவரது தம்பி ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 24 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் அவர்களிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது.
முதலில் ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மொத்தம் 196 பக்கங்கள் அடங்கிய 554 கேள்விகள் அவரிடம் கொடுத்து விளக்கம் கோரப்பட்டது. அதற்கு அவர் அத்தனை கேள்விகளுக்கும் மறுப்பு தெரிவித்தார். தனக்கும், சங்கரராமன் கொலைக்கும் எந்தத் தொடர்பும், சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணைக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு என்ன?
காஞ்சி மடத்திற்குச் சொந்தமான வரதராஜ பெருமாள் கோவிலில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவில் அலுவலகத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.
இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரி கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. இதுவரை189 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 81 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர்.
சங்கரராமனின் மனைவி, குழந்தைகள், தலைமை விசாரணை அதிகாரி எஸ்.பி. சக்திவேலு ஆகியோர் விசாரிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.
வழக்கின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றவாளிகளிடம் இன்று குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
காஞ்சி சாமியார்கள் புதுச்சேரி கோர்ட்டுக்கு வந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications