திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார்
திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்பட 11 பேர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ஹோட்டல் அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கே. கதிர்வேல். இவர் நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 2005-ம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றை அதன் உரிமையாளர்கள் ஆர். குரு சங்கர நாராயணன், ஆர். சங்கரிதேவி, ஆர். சுப்புலட்சுமி, வளமங்கை நாச்சியார் ஆகியோரிடம் இருந்து முறைப்படி வாங்கினேன். இது குறித்து நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளோம்.
இதையடுத்து ஹோட்டலுக்கான வரிகள், கட்டணங்களை நான் செலுத்தினேன். பின்னர் ரூ. 1.5 கோடி செலவு செய்து ஹோட்டலை புதுப்பித்தேன்.
இந்நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் என் ஹோட்டலுக்கு அருகே உள்ள இன்னொரு ஹோட்டல் உரிமையாளர்களான ஜி. ரங்கநாதன், ஜி. மணி மற்றும் சிலர் வந்து என்னை மிரட்டினர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவருடைய சகோதரர் கே.என். ராமஜெயம் ஆகியோர் என் ஹோட்டலை வாங்க ஆர்வமாக உள்ளனர் என்றும், அவர்கள் மீறி இங்கு எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டினர்.
அவர்கள் தொடர்ந்து மிரட்டியதால் நான் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். மறுநாள் இரவு 1.30 மணி அளவில் திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்தவர்கள் என் ஹோட்டலை அடித்து நொறுக்கிவிட்டு, ஊழியர்களையும் விரட்டிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நான் உடனே அப்போதைய கன்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் சுவாமிநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்தேன். அதற்கு அவர் அமைச்சரின் ஆசையைத் தடுக்க முடியாது. எனவே, அவரது தம்பியிடம் சமரசமாகப் போகுமாறு தெரிவித்தார். நான் இந்த உரையாடலை பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
நான் கொடுத்த புகார் பற்றி கண்டுகொள்ளாத காவல்துறை, எதிர்மனுதாரர்களிடம் இருந்து பெற்ற பொய்ப் புகாரை வைத்துக் கொண்டு போலீசார் என் மீதும், என்னைச் சார்ந்தவர்கள் சிலர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி என்னிடம் இருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்ட ஹோட்டலை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications