தி.மு.க.வினர் மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை, சட்டப்படி சந்திப்போம்: அழகிரி
நெல்லை: தி.மு.க., நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை. இவற்றை சட்டப்படி சந்திப்போம் என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார்.
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க. மதுரை நகர் செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ், திருமங்கலம் ஒன்றிய தலைவர் கொடி சந்திர சேகர் உட்பட நான்கு பேரை மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்து பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தி.மு.க. நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை. இவற்றை சட்டப்படி சந்திப்போம் என்று கூறினார்.
அதேபோல நிலமோசடி புகாரில் சிக்கி, மதுரை சிறையில் இருக்கும் கொடைக்கானல் நகராட்சித்தலைவர் முகமது இப்ராகிமையும், இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் அழகிரி நேரில் சந்தித்தார்.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள சுமார் ரூ. 40 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் பண்ணை வீட்டை அபகரிக்க முயன்றதாக, கொடைக்கானல் நகராட்சித்தலைவர் முகமது இப்ராகிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications