கேரள மாணவி கற்பழிப்பு வழக்கு-தூத்துக்குடியை சேர்ந்தவர் கைது
கொச்சி: கேரள மாணவி கற்பழிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாணவி கற்பழிப்பு வழக்கில், இதுவரை 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 130 பேருக்கு தொடர்பு இருப்பதை தனிப்படை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், மாணவி 2-வது முறையாக நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் தனது தந்தை மோட்டார் சைக்கிளில் பல கிலோ மீட்டர் தூரம் அழைத்து சென்றதாக வும், அதன்பின் சிலர் சொகுசு கார்களில் அழைத்து சென்று தன்னை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 15 வாகனங்களை பரவூர் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவியை அழைத்து சென்று கற்பழித்தது குறித்த 68 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில், சில நாட்களாக தலைமறைவாக இருந்த தூத்துக்குடியை சேர்ந்த வீராபெருமாள் (33) என்பவரை, தனிப்படை போலீஸார் கைது செய்தனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், சோட்டானிக்கரா பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் வைத்து, மாணவியை கற்பழித்ததாக விசாரணையில் தெரிகிறது.
இவ்வழக்கில், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள எர்ணக்குளம் மற்றும் திருச்சூர் பகுதிகளை சேர்ந்த இருவரை, தனிப்படை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர். வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள இந்த இருவரையும் கைது செய்து விசாரித்தால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications