மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஆந்திர நபர் கைது
மும்பை: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆந்திராவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 பலிக் கொண்ட மும்பைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த இஸ்க் என்பவரை மகாராஷ்டிர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் பிரித்வ்ராஜ் சவான், மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கண்ட்ரோல் ரூம் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். அங்கு 30 நிமிடங்கள் செலவழித்த
முதல்வருக்கு, ஜி.பி.எஸ் கண்ட்ரோலிங் சிஸ்டம், சிசிடி காமிரா மூலம் போக்குவரத்து சீரமைப்பு, அவசர அழைப்பு எண்: 100ல் இருந்து வரும் அழைப்புகளை பதிவுச் செய்யும் முறை ஆகியவற்றை போலீஸார் விளக்கி காட்டினர்.
போலீஸ் கண்ட்ரோல் ரூம் செயல்பாடுகளை மேலும் நவீனப்படுத்த கேட்டுக் கொண்ட சவான், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்திக்க தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
ஆய்வின் போது, முதல்வர் பிரித்வ்ராஜ் சவான் உடன் அமைச்சர்கள் ஆர்.ஆர்.பட்டேல், சிதிஜ் பட்டேல் ஆகியோர் இருந்தனர்.












Click it and Unblock the Notifications