ஏழை மாணவி படிக்க உதவிய அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம்
குளித்தலை: குளித்தலை அருகே ஏழை மாணவி ஒருவர் படிப்புக்காக அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
கரூர் மாவட்டம் தோகமலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் வீரலட்சுமி.
இவர் செர்வைட் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1165 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலாவது மாணவியாக வந்தார்.
வீரலட்சுமியின் தந்தை கலியபெருமாள் உடல் நலக் குறைவு காரணமாக இறந்து விட்டார். இதனால் தாய் பெத்தமாள் உதவியுடன் படித்து வந்தார்.
வீரலட்சுமிக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தது. ஆனால் படிக்க போதிய பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்.
இதையடுத்து வீரலட்சுமி குளித்தலை எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்தின் உதவியை நாடினார்.
படிப்புக்கு ஏழ்மை தடையாக இருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், மாணவி வீரலட்சுமியை அழைத்து அவரது படிப்புக்கு ரூ. 20 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
மேலும், வீரலட்சுமி படிக்க வங்கி மூலம் கடன் வசதி பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications