ஆபாசமாக எழுதுவதாக லீனா மணிமேகலை மீது இந்து மக்கள் கட்சி போலீஸில் புகார்
Subscribe to Oneindia Tamil

எழுத்தாளர் சிற்பிக்கு கோவையில் வருகிற 30ம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க எழுத்தாளர் லீனா மணிமேகலையும் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது வருகைக்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அது போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளது.
அதில், லீனா மணிமேகலை மிகவும் ஆபாசமாக எழுதி வருகிறார். பெண்களின் அந்தரங்க உறுப்புகள் குறித்தும் அவர் வர்ணித்து எழுதுகிறார். அவரை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது, தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது அக்கட்சி.
இதனால் விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து சமரசப்படுத்த தற்போது முயற்சி நடந்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications