மதுரை பாமக நிர்வாகி கொலை: புதிய தமிழகம் கட்சியினர் 2 பேர் சரண்
திருச்செந்தூர்: மதுரை பாமக மாநில துணை பொதுச் செயலாளர் இளஞ்செழியன் கொலை வழக்கில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 2 பேர் நேற்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
மதுரை அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். பாமக மாநில துணை பொதுச் செயலாளரான இவர் மதுரை பைபாஸ் ரோடு வேல்முருகன் நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் சென்றபோது இவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் புற நகர் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் எஸ்எஸ் காலனி போலீசில் சரணடைந்தார். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மதுரை அவனியாபுரம் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த காசிராஜன், பாலா ஆகியோர் திருச்செந்தூர் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட் பிரீதா இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இருவரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications