கோவையில் நகை செய்ய கொடுக்கப்பட்ட தங்கத்துடன் 2 பேர் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
கோவை: நகை செய்வதற்காக கொடுக்கப்பட்ட 1 கிலோ தங்கத்துடன், மாயமான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், வைசியாள் வீதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர்; நகை கடை உரிமையாளர். இவரிடம் தங்கத்தை பெற்று, அவற்றை ஆபரணங்களாக வடிவமைத்து கொடுப்பவர்கள், தில்லை நகரைச் சேர்ந்த நகைபட்டறை உரிமையாளர்கள் ஆனந்தகுமார் (34), சுரேந்திரன் (32) ஆகியோர்.
கடந்த மே 11ம் தேதி, மூவரிடமும் 1.849 கிராம் தங்கத்தை கொடுத்த ரவிசங்கர், நகைகளாக வடிவமைத்து தர கேட்டுக் கொண்டார். கடந்த 22ம் தேதி ஆனந்தகுமார், சுரேந்திரன் ஆகியோர் 853 கிராம் அளவுக்கு மட்டும் தங்க ஆபரணங்களை வடிவமைத்து கொடுத்தனர்.
மீதமுள்ள தங்கத்துடன், பட்டறைகளை மூடிவிட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து, ரவிசங்கர் கொடுத்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார், ஆனந்தகுமார், சுரேந்திரனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications