கட்சி முடிவை மதித்து பதவி விலகி விட்டேன், இனி நான் சுதந்திர மனிதன்-எதியூரப்பா
பெங்களூர்: கட்சித் தலைவர்களை மதித்து அவர்களது உத்தரவுப்படி நான் பதவியிலிருந்து விலகி விட்டேன். மக்களுக்காக, மக்கள் நலனுக்காக நான் உழைத்தேன். இனி நான் சுதந்திர மனிதன் என்று கூறியுள்ளார் முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ள எதியூரப்பா.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று மாலை தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஊர்வலமாக ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பரத்வாஜை சந்தித்துக் கொடுத்தார் எதியூரப்பா.
பின்னர் வெளியில் வந்த எதியூரப்பா எழுதி வைத்திருந்த செய்திக்குறிப்பை வாசித்தார். அதில் தனது ஆட்சி செய்த சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை வாசித்தார்.
அவர் கூறுகையில், கட்சித் தலைவர்களின் உத்தரவை ஏற்று, அவர்களை மதித்து நான் பதவியிலிருந்து விலகியுள்ளேன். மக்களுக்காக நான் உழைத்தேன். அந்த வாய்ப்பை அளித்த கட்சித் தலைமைக்கும், மக்களுக்கும், அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் எதியூரப்பா.
முன்னதாக அவர் கூறுகையில், விதான செளதாவிலிருந்து செயல்பட விடாமல் எனது கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டு விட்டனர். இருப்பினும் இப்போது நான் பதவியிலிருந்து விலகி விட்டேன். இனிமேல் நான் சுதந்திர மனிதன். மக்களை நான் இனி சந்திக்க எந்தவித சிக்கலும் இல்லை, தடையும் இல்லை. என்னை இனி யாரும் தடுக்க முடியாது.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக இனி உழைக்கப் போகிறேன். பெண்கள் நலனுக்காக உழைக்கப் போகிறேன். மக்களுக்காக பாடுபடப் போகிறேன். இதை யாரும் தடுக்க முடியாது என்றார் அவர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications